மயிலாடுதுறை, ஜன.12 - தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி யின் செயலாளருக்கு “அன்னை தெரசா விருது ” வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தரங்கம்பாடி ஓசோன் பீச் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. தூய தெரசா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் செயலா ளர் அருட்சகோதரி மெட் டில்டா என்கிற கருணா ஜோசப் பாத்-க்கு மனிதநேய மாண்பையும், தரங்கை மண்ணில் அவர் செய்த தன்னலமற்ற சேவையையும் பாராட்டி “அன்னை தெரசா விருது” வழங்கி கௌரவிக் கப்பட்டது. தூய தெரசா கல்லூரி யின் செயலாளர் அருட்சகோ தரி கருணா ஜோசப் பாத், தரங்கை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மாணவி களுக்கு கல்வி சேவையாற்றி வருகிறார். எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்களுக்கும், ஆதரவற்ற மாணவி களுக்கும் அடைக்கலம் தந்து தொடக்கப் பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரை வழங்கி வருகிறார். தரங்கை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பொதுநல சேவை கள், குறிப்பாக விளிம்பு நிலை யில் உள்ள அடித்தட்டு பெண்களும் சமுதாயத்தில் முன்னேற்றக் காண வேண் டும் என்ற ஒரே குறிக்கோளில் இயங்கி வருகிறார். தன்ன லமற்ற இவரின் சேவையை பாராட்டியும், மனிதநேய மாண்பை போற்றும் வகை யிலும் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓசோன் பீச் கிளப்பின் மாவட்ட ஆளு நர்கள், தலைவர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.