திருவாரூர், டிச.29 - சேதமடைந்த சாலை களை போர்க்கால அடிப்ப டையில் சீர் செய்யக் கோரி ஊராட்சி மன்றத் தலைவ ரிடம் மனு அளிக்கும் போ ராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆய்குடி கிளை சார்பில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், ஆய்குடி ஊராட்சிக்குட்பட்ட கொல்லக்கண்டம் ஆதிதிரா விடர் தெரு, மேலமுகந் தனூர் ஆதிதிராவிடர் தெரு, அக்ரஹாரம் பிள்ளையார் கோயில் தெரு, கொல்லக் கண்டம் செபஸ்தியார் கோ யில் தெரு, பட்டுடையானி ருப்பு காலனி தெரு, எண்கண் வெட்டாற்றங்கரை மயான தார்ச்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள், மக்கள் நடந்து செல்ல முடியாமல் குண்டும், குழியுமாக உள்ளது. சேதமடைந்த அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்து, புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். ஆய்குடி ஊராட்சியில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். அரசு அறிவிக் கும் நலத் திட்டங்களில் அரசியல் தலையீடு இல்லா மல் நியாயமான முறையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். ஆய்குடி ஊராட்சிக் குட்பட்ட வடிகால்கள், வாய்க் கால்களை தூர்வார வேண் டும். நூறு நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண் டும். சம்பள நிலுவையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த மனு அளிக்கும் போ ராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற உறுப்பினர் பி.குமார் தலைமை வகித் தார். சிபிஎம் ஒன்றியச் செய லாளர் டி.ஜெயபால், மாவட் டக் குழு உறுப்பினர்கள் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஆய்க்குடி ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமிகாந்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.