districts

img

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை திருச்சிராப்பள்ளி, அக்.27 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா கேட்டு சிபிஎம் தலை மையில் மனு கொடுக்க வந்த பொது மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி யதால் தள்ளுமுள்ளு மற்றும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை தொ டர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, ராமச்சந்திராநகர், செட்டியப்பட்டி, கே.கே.நகர், ராஜமாணிக்கபிள்ளை தெரு, ஓலையூர் பகுதியில் வாடகை  வீட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத் தின் கீழ் அந்தந்த பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும். திருச்சி மேற்கு தொகுதி பஞ்சப் பூர் மற்றும் பிராட்டியூர் பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பல  தலைமுறைகளாக வசிக்கும் மக்க ளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட  வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த  500-க்கும் மேற்பட்ட மக்கள் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் மனு கொடு க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அபிஷேக புரம் பகுதிச் செயலாளர் வேலுச் சாமி தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாநிலக் குழு  உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், நிர்மலா, சேட்டு  ஆகியோர் பேசினர். பின்னர் அங்கிருந்து ஊர்வ லமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் சென்றனர். அப்போது   அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசார் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனு மதிக்க மறுத்ததால், தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர் போலீசார் அனைவரை யும் உள்ளே அனுமதித்தனர்.   இதனைத் தொடர்ந்து மாவட்ட  ஆட்சியர் பிரதீப்குமார் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். பின்பு அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.