கும்பகோணம், அக்.3 - விவசாய நீர் பாசனத்திற்கு பயன்படுத்தி வரும் ஆரியசேரி பெரியவாய்க்காலின் ஆக்கிரமிப்பை அகற்றி, வாய்க்காலை தூர்வார வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் கும்பகோணம் வட்டாட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், “கும்பகோணம் அருகே உள்ள ஆத்திக்குளம் தலைப்பு ஆரியச்சேரி பெரிய வாய்க்கால் சேத்திக்குளம். செம்மங் குடி, ஆரியச்சேரி, கீரனூர் உட்பட பல கிரா மங்களில் உள்ள சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்களை பாதுகாக்க கூடிய வகையில் ஆரியச்சேரி பெரிய வாய்க்கால் இருந்து வந்தது. மேலும் விவசாயத்திற்கு, குளம், குட்டை, நீர் நிலைகளை நிரப்பும் வகை யில் பாய்ச்சல் வாய்க்காலாக பயன் படுத்தி வந்த ஆரியச்சேரி பெரிய வாய்க்காலை, தற்போது தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இத னால், கிராமங்களுக்கு இதுவரை ஆற்று நீர் வராமலும், பாசனத்திற்கு பயன்படா மலும் இருக்கிறது. இதன் விளைவாக, விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளா கியுள்ளனர். எனவே ஆரியச்சேரி பெரிய வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, மேற்கண்ட கிராமங் களுக்கு ஆற்றுநீர் நிரந்தரமாக செல்லவும், விவசாயம் செய்யவும் வழிவகை செய்ய வேண்டும். நடப்பு விவசாயத்திற்கு உதவும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கும்பகோணம் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.