திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவிப் பொறியாளராக தேர்வாகியுள்ள 3 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.