பாபநாசம், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். பாப நாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹி ருல்லா பேசினார். இதில், 200 மாண வர்களுக்கு ரூ.9.67 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டன. கும்ப கோணம் மாவட்டக் கல்வி அலுவ லர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை யாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.