தஞ்சாவூர், பிப்.19- தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என திமுக பொருளாளரும், நாடாளு மன்றக் குழுத் தலைவருமான டி. ஆர்.பாலு தெரிவித்தார். தஞ்சாவூர் திலகர் திடலில் ஞாயிற் றுக்கிழமை மாலை நடைபெற்ற ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசிய தாவது: கடந்த 2019 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அந்த பல வீனத்தைப் பயன்படுத்தி பாஜக வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றது. அதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இதிலிருந்து எத்தனை பேர் விலகிச் சென்றாலும், இந்தியா கூட்டணியிடம்தான் வாக்கு வங்கி உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காலம் வந்துவிட்டது என 2011 ஆம் ஆண்டில் அப்போ தைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நரேந்திர மோடி கூறினார். அச்சட்டத்தைத் தயார்படுத்த அரசு வழக்குரைஞரின் ஆலோசனைப்படி உணவு பாதுகாப்புச் சட்டமும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அடுத்து குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தைக் கொண்டு வரும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அதை நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், மோடி பிரதம ராகி 10 ஆண்டுகளாகியும் அச் சட்டத்தை நிறைவேற்றாதது மட்டு மல்லாமல், 3 கருப்புச் சட்டங்களை யும் கொண்டு வந்தார். கார்ப்பரேட்டுகளுக்கு நிதிச் சலுகை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சத வீதம் வசூல் செய்யப்பட்ட நிலை யில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சதவீதம் ரூ.50 ஆயிரம் கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11 சதவீதத்துக்கு எவ்வளவு இழப்பாகி யுள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வளவும் பெரிய முத லாளிகளுக்கு ஒன்றிய அரசு சலுகை செய்துள்ளது.
திமுக ஆட்சியில் குடும்பத் தலை விக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பேர் பயனடைந்துள்ளனர். மொத்த முள்ள 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீதம் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தஞ்சாவூர் தொகுதி மக்க ளவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார், மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் நடை பெற்ற கூட்டத்திற்கு திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் தலைவர் என்.கௌதமன் வரவேற் றார். போக்குவரத்துத் துறை அமைச் சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் பலர் உரையாற்றினார்.