districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஊராட்சி செயலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, பிப்.12 - திருநெல்வேலி மாவட் டத்தில் பணியாற்றி வந்த சங்கர் என்ற ஊராட்சி செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மயிலாடு துறை மாவட்டம், செம்ப னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செய லாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர்  நாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். 

தஞ்சை பெரிய கோயிலில்  கயிலாய வலம்

தஞ்சாவூர், பிப்.12 - பௌர்ணமி யை யொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் செவ்வாயன்று மாலை நடைபெற்ற திரு தென்கயிலாய வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் திரு தென்கயிலாய வலம் வரும் நிகழ்ச்சி 2024 செப்டம்பர் மாதம் தொ டங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தை மாத பௌர்ணமியையொட்டி, திரு தென்கயிலாய வலம்  வரும் நிகழ்ச்சி செவ்வா யன்று மாலை தொடங்கி யது. இதில், ஏராளமான பக்தர்கள் திருச்சுற்றை வலம் வந்தனர். இந்த  கயிலாய வலம் புதன் கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.

திருநல்லூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை, பிப்.12 - புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திரு நல்லூரில் (தென்னலூர்) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயில் திரு விழாவையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வருவதற்கு முன்பு, இங்குள்ள 7  வாடிவாசல்களில் இருந்தும் காளைகள் அவிழ்த்து விடப் படும். தற்போது ஒரு வாடிவாசல் மட்டும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் பரிசு பொருட்கள் வழங்கப் படுவதும் இல்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இலுப்பூர் கோட்டாட்சியர் அக்பர் அலி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்ர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. காளைகளை அடக்குவதற்கு 250 பேர் களம்  இறங்கினர். காளைகள் முட்டியதில் 60 காயமடைந்தனர். பாது காப்பு பணிகளை இலுப்பூர் போலீசார் செய்திருந்தனர். 

மானநஷ்ட ஈடு கோரி வழக்கு காவல்துறை தரப்பில் பதிலளிக்க கோரி நீதிபதிகள் உத்தரவு

மதுரை, பிப்.12-  இராமநாதபுரம் மாவட் டம் தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அதில், “ தேவிப்பட்டி னத்தைச் சேர்ந்த மைதீன் என்பவரை வழக்கு விசா ரணை எனக்கூறி காவல் துறையினர் துன்புறுத்திய நிலையில், இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பா ளராக (டிஎஸ்பி) இருந்த புக ழேந்தி கணேஷை வழக்கில்  எதிர்மனுதாரராக சேர்த்து  மதுரை அமர்வில் ஆட் கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தேன்.  இதனால் காவல்துறை யினர் என் மீது விரோத மனப்  பான்மையுடன் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2020 இல் மருத்துவர் ஒருவரை  பணம் கேட்டு மிரட்டி தொல்லை கொடுத்தவர் மீது புகார் அளித்திருந்தோம்.  அதில் அந்த மருத்துவர் போலி மருத்துவர் என்றும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி என் மீதும் பொய்யாக வழக்குப் பதிவு செய்து தொண்டி காவல்துறையினர் என்னை சிறையில் அடைத்தனர். பின்னர் அது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2023ல் என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.  சமுதாயத்தில் வழக்கறி ஞராக மரியாதையுடன் பணி புரிந்து வந்த எனது நற்பெய ருக்கும், புகழுக்கும் களங் கம் ஏற்படும் வகையில் காவல்துறையினர் பொய் வான வழக்குப் பதிவு செய்து  6 நாட்கள் சிறையில் இருக்க காரணமாகிவிட்டனர். எனவே இதற்கு காரணமான  டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, கலா ராணி, துணை ஆய்வாளர்கள் ஜோதி முருகன், சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  இதற்கு இழப்பீ டாக 20 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண் டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தன பால் முன்பாக செவ்வா யன்று விசாரணைக்கு வந் தது. வழக்கு சம்பந்தமாக அரசு தரப்பு மற்றும் காவல்  துறை தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்ய உத்தரவிட்ட  நீதிபதி, வழக்கு விசாரணை யை ஒத்திவைத்தார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த பழனி

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த பழனி பழனி, பிப்.11- பழனி முருகன் மலைக் கோவிலில் தைப்பூசத்தையொட்டி செவ்வாயன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில்  வெளி ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல் கிறார்கள். இந்த விழாவையொட்டி மாற்று பேருந்து வசதி,  தற்காலிக பேருந்து வசதி, தங்கும் விடுதிகள் பக்தர்களின்  வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், சரியான கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி ஏதும்  இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். சனி,  ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அதிகமான மக்கள் வந்த னர். செவ்வாயன்று தைப்பூசத் திருநாளில் லட்சக்கணக்கா னோர் 3 மணி நேரம், 4 மணி நேரம் காத்திருந்தும் மலை கோயிலுக்கு செல்ல முடியாமல் திரும்ப நேர்ந்தது. அடிவாரம் பகுதியில் நெருக்கடியால் நடந்து செல்லக்  கூட முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு வழி பாதை அமைத்  தும் சரியான கண்காணிப்பின்றி வழிகள் அடைத்தே காணப் பட்டது.  மேலும் போக்குவரத்தை பழனிக்கு வெளியே அமைத்திருந்தால் ஓரளவு சீர்செய்திருக்கலாம் என்றும், வருங்காலங்களிலாவது சரியான வழிமுறைகளை கடைப்  பிடித்து  வசதி வாய்ப்பினை ஏற்படுத்தி தருமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை உடனடியாக  திருக்கோயில் நிர்வாகமும், காவல்துறையினரும், போக்கு வரத்து துறையினரும் மற் றும் சம்பந்தப்பட்ட துறையின ரும் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

காரைக்குடி குப்பைக் கிடங்கை  மாற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு

நகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு மதுரை, பிப்.12-  சிவகங்கையைச் சேர்ந்த அரசு சோமன்  என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  பொதுநல வழக்கினை தாக்கல் செய்தி ருந்தார். அதில், “காரைக்குடி வறட்சி யான மாவட்டம். கடந்த 80 ஆண்டுகளாக சம்பை ஊற்று எனும் இயற்கை ஊற் றையே காரைக்குடி நகராட்சியினர் சார்த்  துள்ளனர். குடிநீர் தேவை பூர்த்தி செய்வ தற்காக மூன்று ஆழ்குழாய் கிணறுகள்  தேவகோட்டை பகுதியில் அமைக்கப் பட்டுள்ளன. காரைக்குடியில் சேகரிக்கப் படும் அனைத்து திடக்கழிவுகளையும் இப்பகுதி நிலத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவ தோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் அதி கமாக உள்ளது. அதோடு குடிநீர் தேவை யை பூர்த்தி செய்வதற்காக அமைக் கப்பட்ட ஆழ்துளை கிணற்று நீர் மாசுபட்டு,  பயன்படுத்துவதாக இல்லை. எனவே இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என கூறி யிருந்தார். இந்த வழக்கு புதனன்று தலைமை நீதி பதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி லட்சுமி நாராய ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதையடுத்து நீதிபதிகள், “காரைக்குடி நகராட்சி ஆணையர் குப்பை கிடங்கை வேறு எங்கு மாற்றலாம்? அந்த இடம் எவ்  வளவு தொலைவில் உள்ளது? தற்போ தைய நிலை என்ன? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு  விசாரணையை வியாழனன்று ஒத்திவைத்தனர்.

மாநில அளவில் சிறுவர்களுக்கு சதுரங்கப் போட்டி

பாபநாசம், பிப்.12- பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்கப் போட்டியை நடத்தின. தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் வரவேற்றார். உதவி ஆளுநர் மண்டலம்-13 அறிவழகன், தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணைச் செயலர் செந்தில்குமரன், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அளவில் 19 மாவட்டங்களிலிருந்து 300 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியை இளங்கோவன் தொடங்கி வைத்தார். மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்க, தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழை ரோட்டரி மாவட்ட சேர்மன் திருப்பதி வழங்கினார். பாபநாசம் தாலுகா சதுரங்க கழக துணைத் தலைவர் செந்தில்நாதன், அன்பு சீனிவாசன், பாபநாசம் ரோட்டரி சங்க பொருளாளர் ராமநாதன், பக்ருதீன் அலி அகமது, முருகவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

ரைட்டன்பட்டி பகுதிக்கு தனிக் கல்லறை

பிஷப்பிடம் மக்கள் முறையீடு ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.12-  மதுரை உயர் மறை மாவட்ட பங்கின்  கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில்  500க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. ரைட்டன்பட்டி பகுதியில் இறந்த வர்களை சீனியாபுரம் பகுதியில் அமைந்  துள்ள மயானத்தில் புதைப்பது வழக்கம்.  இந்நிலையில் ரைட்டன்பட்டி பகுதிக்கு தனி யாக கல்லறை கேட்டு தொடர்ந்து மதுரை மாவட்ட அதிபருக்கு மனு கொடுத்து வந் துள்ளனர். ஆனால் இன்றுவரை தனி கல் லறை ஒதுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு அடுத்தடுத்து மூன்று பேர்  இறந்து விட்டனர். இந்நிலையில் கடை சியாக இறந்தவரை சீனியாபுரம் கல்லறை யில் புதைப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரைட்டன்பட்டி பகுதி மக்கள்  பேருந்து மறியலில் ஈடுபட்டனர். காவல்  துறை, வருவாய்த்துறையினர் தலையிட்ட தன் பேரில் கலைந்து சென்றனர்.  இந்நிலையில் திங்களன்று மதுரை உயர்மறை மாவட்ட பிஷப் பொறுப்பில் உள்ள அந்தோணிசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தந்தார். தகவலறிந்த சீனியாபுரம் பகுதி மக்கள், பிஷப்பை நேரில் சந்தித்து ரைட்டன்பட்டி பகுதிக்கு தனியாக கல்லறை  கட்டுவதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று  கோரிக்கை முன் வைத்தனர். இறுதியில் ஆறு மாத காலத்திற்குள் ரைட்டன்பட்டி பகுதிக்கு தனி கல்லறை கட்ட  இடம் ஒதுக்கித் தருவதாக பிஷப் உறுதி  அளித்ததின் பேரில், மக்கள் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில் பங்குத் தந்தை சந்தன சகாயம், சீனியாபுரம் நாட்  டாமை அமல்ராஜ் மற்றும் உதவி பங்குத்  தந்தை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.