districts

img

மக்கள் குறைதீர் கூட்டம்: மனு எழுத ஏற்பாடு

கோவை, மார்ச் 11- மக்கள் குறைதீர் கூட்டத் தில் பங்கேற்க வரும் மக்க ளுக்கு மனுக்களை இலவ சமாக எழுத கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், வாரம்  தோறும் திங்களன்று மக்கள் குறைத்தீர்க் கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்க ணக்கான மக்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிப்பர். இவ்வாறு  மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான  மக்கள் எவ்வாறு மனு எழுதுவது என தெரியா தவர்களாகவே இருக்கின்றனர். மேலும்,  ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனுக்களை  எழுதி தர வசதி இருக்கும் நிலையில், பெரும்பாலான மக்களுக்கு அது தெரியாமல்  ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் பணம் கொடுத்து மனுக்களை எழுதி செல்கின்றனர்.  இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத் தின் வெளியில் இருப்பவர்கள் மனுக்கள் எழு துவதற்கு அதிகமான பணம் கேட்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், ஆட்சியர் அலுவல கத்திற்குள் இலவசமாக எழுதித்தருபவர் களை, தற்பொழுது ஆட்சியர் அலுவல கத்தின் வெளியில் அமர்த்தி இலவசமாக பொதுமக்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு கள் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் இலவசமாக மனுக்களை எழுதிச் சென்றனர்.