districts

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் பொதுமக்களுக்கு பதிலளிக்க உதவி மையங்கள் அமைப்பு

தஞ்சாவூர், செப்.17- தஞ்சாவூர் மாவட்டத் தில் கலைஞர் மகளிர் உரி மைத் தொகைத் திட்டம்  தொடர்பாக பொதுமக்க ளுக்கு பதிலளிக்க உதவி  மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர்  மேலும் தெரிவித்திருப்பதா வது: கலைஞர் மகளிர் உரி மைத் தொகை திட்டம் தொ டர்பாக மாவட்ட ஆட்சிய ரகம், கோட்டாட்சியர் அலுவ லகங்கள், அனைத்து வட்ட  அலுவலகங்கள் ஆகிய வற்றில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொது மக்களின் கோரிக்கை தொடர் பாக பதிலளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு: மாவட்ட ஆட்சியரகம் 93453 36838, கோட்டாட்சியர் அலுவ லகங்களான தஞ்சாவூர் 04362-238033, கும்பகோ ணம் 0435-2430101, பட்டுக் கோட்டை 04373-237247, வட்ட  அலுவலகங்களான தஞ்சா வூர் 04362-230456, திருவை யாறு 04362-260248, பூதலூர்  04362-288107, ஒரத்தநாடு 04372-233225, கும்பகோணம் 0435-2430227, பாபநாசம் 04374-222456, திருவிடை மருதூர் 0435-2460187, பட்டுக் கோட்டை 04373-235049, பேராவூரணி 04373-232456. பொதுமக்கள் இத்திட்டத் தில் தங்களது விண்ணப்பத் தின் நிலையை அறிந்து கொள்ள பொது உள்நுழைவு  (பப்ளிக் லாகின்) வழங்கப் படும். பயனாளிகள் தங்க ளது ஆதார் எண் அல்லது  விண்ணப்பத்தில் வழங்கிய  கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள லாம். மேலும், அனைத்து மின் மாவட்ட உள்நுழைவு அலுவலர்களும் போர்ட லில் உள்ளீடு செய்து விண் ணப்பங்களின் நிலை யைத் தெரிந்து கொள்ள லாம். இ-சேவை மையங்க ளின் மூலமும்  விண்ணப்பங் களின் நிலையை அறிந்து கொள்ளலாம். தகுதியுடைய விண்ணப் பதாரர்களின் முகவரிக்கு தமிழக முதல்வரின் வாழ்த்து  மடல் அனுப்பி வைக்கப்ப டும். பணம் செலுத்தப்பட்ட விவரம் குறுஞ்செய்தியில் அனுப்பப்படும். மேலும், செப்.18 அன்று முதல் நிரா கரிப்புச் செய்திகள் குறுஞ் செய்தியில் அனுப்பி வைக்கப் படும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.