திருச்சிராப்பள்ளி,அக்,5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் லெனின் திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை ஆட்சியர் சரண்யாவிடம் புதனன்று கொடுத்த மனுவில் கூறியி ருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் இ.பி.ரோட்டில் வாழைக்காய் மண்டி எதிர் புறம் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலான பகுதியில் டாஸ்மாக் மது பான கடை திறப்பதற்கு ஏற் பாடுகள் நடந்து வருகிறது. ஏற்கனவே மார்க்கெட் டைச் சுற்றி இரண்டு டாஸ் மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபானக் கடை கள் மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. இந்தச் சூழலில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க முயற்சிப்பதற்கு மக் கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. குடியால் தொழி லாளர்களின் வருமானம் பறி போவதுடன், குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு உள் ளாகி உள்ளன. குடியால் ஏரா ளமான தொழிலாளர்கள் உயிரிழப்பதுடன் இளம் விதவைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதை கணக்கில் கொண்டு புதி தாக திறக்கப்பட உள்ள டாஸ் மாக் மதுபானக் கடையை திறக்க வேண்டாம் என சம் பந்தப்பட்ட துறைக்கு உத்தர விட ஆவன செய்ய வேண்டு மென மனுவில் கூறப்பட் டுள்ளது.