கும்பகோணம் ஆக.8-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில், ஆக.12 (சனி) மற்றும் ஆக.13 (ஞாயிறு) வார விடுமுறை மற்றும் சுதந்திர தின விடு முறையை முன்னிட்டு, பொது மக்க ளின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், “வார விடு முறை மற்றும் சுதந்திர தின விடுமுறை யொட்டி திருச்சி, கும்பகோணம், தஞ்சா வூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக் கோட்டை, காரைக்குடி, இராமநாத புரம் ஆகிய ஊர்களிலிருந்து சென் னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக் கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக் கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டி னம், வேளாங்கண்ணி ஆகிய ஊர் களுக்கும் 100 பேருந்துகள் என 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதே போன்று, மேற்படி விடு முறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப, ஆக. 13, 15 (ஞாயிறு, செவ்வாய்) நாட்களில் சென்னைத் தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத் தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரி வான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11 முதல் 14 வரை தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல வசதியாக முன்னதாகவே பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், முக்கிய பேருந்து நிலை யங்களில் சிறப்பு அலுவலர்கள், பரி சோதகர்கள், பணியாளர்கள் பணி யமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.