districts

img

ஏவிசி கல்லூரியில் கலையரங்கம் திறப்பு

மயிலாடுதுறை, செப்.25- மயிலாடுதுறை மாவட்டம் மன்னமந்தல் ஊராட்சியில்  உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் நவீனமய மாக்கப்பட்ட கலையரங்கை கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதியுமான கே. வெங்கட்ராமன் மாணவர்களின் பயன்  பாட்டிற்காக திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன், தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர்  மேஜர்.ஜி. ரவிசெல்வம், துணை முதல்வர் எம்.மதி வாணன், புல முதன்மையர் எஸ். மயில்வாகனன், பொறி யியல்-பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநர்கள் எம்.செந்தில்முருகன், ஏ.வளவன், பொறியியல் மற்றும் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர்கள் சி.சுந்தர்ராஜன், எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.