districts

img

புதிய அங்கன்வாடி, உணவு தானியக் கிடங்கு திறப்பு

மயிலாடுதுறை, மார்ச் 15 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தின் கீழ் ரூ.12.67 லட்சம் மதிப்பில் புதிய உணவு தானியக் கட்டடம், ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய  அங்கன்வாடி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், செம்ப னார்கோவில் ஒன்றியக்குழு  தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பனார்கோ வில் ஒன்றிய குழு துணைத்தலைவர் பாஸ் கரன், ஒன்றியக் குழு உறுப்பினர் வே.சாந்தி,  ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரமோகன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.