மயிலாடுதுறை, செப்.6 - மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகையில் இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் என்பவரால் நிறுவப்பட்ட ‘யாழ் மரச்செக்கு ஆலை மற்றும் இயற்கை உணவுப்பொருள் அங்காடியை’ தமிழ்நாடு அரசின் விருது பெற்ற வேளாண் செம்மல் இயற்கை மருத்து வர் கோ.சித்தர் திறந்து வைத்து உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நோயும், பேயும் கற்பனை” உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் வரும், குழந்தைகளுக்கு நம் மண்ணுக் கான உணவை வழங்க வேண்டும். தற்காலத்தில் செய்யப்படும் மைதா வகையில் செய்யப்பட்ட உணவை வழங்குவது தவறாகத்தான் இருக்கும். செயற்கரிய செய்கிற ஒரு செயல் தமிழ் மரபின் தொன்மையாக இருந்தது. அதனை மீண்டும் மீட்கப்படுகின்ற வகையில் அரிய செயலாக இன்று யாழ் மரச்செக்கு ஆலை மற்றும் இயற்கை உணவு பொருள் அங்காடி திறக்கப்பட் டுள்ளது. வணிக நோக்கத்தில் திறக்காமல், நஞ்சில்லாத உணவுப் பொருள்களை வழங்குவதற்காகவே இந்த அங்கா டியை திறந்து முன்னுதாரணமாக திகழும் இயற்கை விவசாயி குடும்பத்தி னருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்றைய கால சூழலில் நீரிழிவு நோய், புற்றுநோய், ஆண்-பெண் மலட்டுத் தன்மை, தோல் நோய்கள் பெருகி வரு கின்றன. இந்த நோய்களை குணப்படுத் துவதற்காக அரசு, மருத்துவ நிபுணத்து வத்தையும் மருத்துவமனையையும் விரிவுபடுத்துகிறது. இதனால் தீர்வு கிடைக்காது. உணவுகளால் ஏற்படும் குறைகளை போக்குவதற்கு இயற்கை உணவு பொருள்கள் மருந்தாக உள்ளன. உணவில் ஒழுக்கம் இருந்தால், உடலில் ஒழுக்கம் உண்டாகும். அதற் கான மருந்துக்கடை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தை களுக்கு எந்த உணவை தரக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நம் மண்ணில் கிடைக்கும் உணவுகளை உண்டால் பாதிப்பு கிடை யாது. நூடுல்ஸ் தவறான உணவு. நமது பாரம்பரிய நூடுல்ஸாக இடியாப்பம் போன்ற நிறைய ரகங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு மைதாவில் தயாரிக் கப்பட்ட உணவுகளை தரக் கூடாது. நம் மரபு சார்ந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இன்றைய நவீன உலகத்தில் தயா ரிக்கப்படும் உணவுகள் தவறானவை” என்றார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.