கரூர், டிச.16 - தங்களது வாழ்வாதாரத்தையும் கால்நடைகளையும் கரூர் மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சுமார் ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மணல் அள்ளுவதில் முறைகேடு நடந்துள் ளதாக கூறி, ஒன்றிய அரசின் அம லாக்கத் துறை சோதனை நடத்தியதின் விளைவாக, கடந்த இரண்டு மாத மாக கரூரில் உள்ள காவிரி ஆற்றில் இரண்டு மணல் குவாரிகள் செயல்படா மல் மூடப்பட்டுள்ளன. மணல் மாட்டு வண்டி தொழிலாளர் களுக்கு வருமானம் இல்லாததால் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப் பட்டுள்ளனர். மேலும் கால்நடைகளை பராமரிக்க முடியாமலும், கால்நடை களுக்கு உணவு வாங்க முடியாமலும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்ற னர். இதனால் கால்நடைகளை பாதுகாக்க முடியவில்லை. மணல் மாட்டுவண்டி தொழிலாளர் களையும், கால்நடைகளையும் பாதுகாத்திட, காவிரி ஆற்றில் செயல் பட்டு வந்த மணல் குவாரிகளை உடனே திறக்க கரூர் மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய மணல் விற்பனை விலை ரூ.700-க்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களின் குடும்பத்தையும், கால்நடைகளையும் பாதுகாக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கரூர் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஜி.பிரகாஷ், மாவட்டப் பொருளா ளர் வி.கந்தசாமி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் நூற்றுக் கணக்கான மாட்டு வண்டி தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாட்டுவண்டி தொழிலா ளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.