தஞ்சாவூர், ஜூன்.15-
பெரம்பலூர் மாவட்டம் பாடலுாரை சேர்ந்த அழகுதுரை (36). ஓட்டுநர். திருச்சி மாவட்டம் மணச்சநல்லுாரை சேர்ந்த ஆறு முகம் (39), நடத்துநர். இருவரும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை- திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும் அரசு பேருந்தில் பணி யாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு, இருவரும் பணி முடிந்து, ஜெபமாலைபுரம் டெப்போவில் இருந்து புறப்பட்டு, பெரியகோவில் அருகே உள்ள சோழன் சிலை பகுதியில் பேருந்து ஏறுவதற்காக நடந்து வந்தனர்.
அப்போது, சீனிவாசபுரம் செக்கடி பகுதி யில், பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென, அழகுதுரை, ஆறுமுகம் இரு வரையும் வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டி யுள்ளனர். இதற்கு அழகுதுரை, ஆறு முகம் மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சரமாரியாக கட்டையாலும் கற்களா லும் இருவரையும் தாக்கி, அழகுதுரை யிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணம், வெள்ளிச் செயின், ஆறுமுகத்தி டம் இருந்த 1,800 ரூபாய் பணம், வாட்ச் ஆகி யவற்றைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.
காயமடைந்த அழகுத்துரை, ஆறு முகம் ஆகிய இருவரும் ஜெபமாலைபுரம் டெப்போவுக்கு தகவல் அளித்தனர். அங்கிருந்து வந்த பணியாளர்கள் இரு வரையும் மீட்டு, தஞ்சாவூர் மருத்து வக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். இதில், அழகு துரையின் தலையின் பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு, மூன்று தையல்கள் போடப் பட்டுள்ளன. ஆறுமுகத்துக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வியாழக்கிழமை அதி காலை 4 மணி முதல் 5:30 மணி வரை பேருந்துகளை இயக்காமல், தொழிலா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும் , இருவரின் மருத்துவச் செலவுகளையும் போக்கு வரத்து கழக நிர்வாகம் ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர், போக்குவரத்துக்கழக அதிகாரி கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழி யர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள் ளப்பட்டது. தஞ்சாவூர் நகர மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில் போக்கு வரத்து ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்ப வத்தில், மேலஅலங்கம், கோட்டை தெரு வைச் சேர்ந்த சண்முகம் மகன் புருஷோத்த மன் (23), நாராயணன் மகன் ராமன் (22) மற்றும் 16 வயது சிறுவன் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.