அரியலூர், ஜூலை 27-
பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து செவிலி யர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சென்னை கிண்டி யில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு உயர் மருத்துவமனைக்கு வழிகாட்டி செவிலியர் காலி பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த மருத்துவமனைக்கு நிரந்தர செவிலியர்களைப் பணியமர்த்த வேண்டும். கிராமப்புற ஆரம்ப சுகா தார நிலையங்களில் குறைந்த பட்சம் எட்டு செவிலியர்களை நிரந்தரச் செவிலியர் களாகப் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன.
அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதி, மாவட்டச் செயலாளர் தனசெல்வி, மாவட்டத் துணைத் தலைவர் ரேவதி, மாவட்ட இணைச் செய லாளர் அனிதா, அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஷேக்தாவூத் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.