தஞ்சாவூர், பிப்.5 - பேராவூரணி - ராமேஸ் வரம் வழித்தடத்தில், ஏற்க னவே இயங்கி வந்த பேருந் துக்கு பதிலாக, தமிழக அர சால் தற்போது கொள்முதல் செய்யப்பட்ட புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலை யத்திலிருந்து, தடம் எண் 317-சி என்ற கும்பகோணம் போக்குவரத்துக் கழக அரசுப் பேருந்து காலை 7:35 மணிக்கு புறப்பட்டு இராமேஸ்வரத்திற்கு மதியம் 12 மணிக்கு சென்று சேரும். பின்னர் அங்கிருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, பட்டுக் கோட்டை - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழி யாக பேராவூரணிக்கு இரவு 12:30 மணிக்கு வந்து சேரும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து பழைய பேருந்தாக இருந்ததால், புதிய பேருந்து இயக்க வேண்டும் என பொது மக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார், போக்குவரத்து துறை அமைச் சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி புதிய பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்நிலையில், பேராவூரணி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பேருந்தின் பயணம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் முன்னி லையில் கொடியசைத்து துவக்கி வைக்கப் பட்டது.