districts

img

புதிய மின்மாற்றி அமைப்பு

மன்னார்குடி, ஜூன் 30 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் தஞ்சாவூர் சாலையில் உள்ள வசந்தம் நகரில் தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி, உதவி செயற்பொறி யாளர் சா.சம்பத் முன்னிலையில் இயக்கி வைக்கப் பட்டது.  இப்பகுதியில் நுகர்வோர்கள் குறைந்த மின் அழுத்தத்தை நிவர்த்தி செய்ய கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து சுமார் ரூ.4 லட்சம் செலவில் இந்த  மின் மாற்றி அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளமின் பொறியாளர் கே.கண்ணன், நகராட்சி கவுன்சிலர் எ.பி.அசோகன், பொதுமக்கள், மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.