districts

img

நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஆக.8 -  தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரியின் சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை முன்னிட்டு, கந்தர்வகோட்டை அருகே உள்ள செங்களூர் கிராமத்தில் பொது மக்களுக்கு தனி நபர் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது.  இதையொட்டி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்பு ணர்வு பேரணிக்கு, நாட்டு நலப் பணித் திட்ட  அலுவலர்கள் ஆர்.பிர சாந்த், கே.கரிமனிஷா தலைமை வகித்தனர். கிராம முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.  தொடர்ந்து, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் சார்பில், செங்களூரு கிராம கலை யரங்கத்தில், தனிநபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.