தஞ்சாவூர், டிச.19 - தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், தஞ்சாவூ ரில் அமைந்துள்ள ஒருங்கி ணைந்த பண்ணைய மைய த்துக்கு, தேசிய அளவில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மையத்துக்கான விருது வழங்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநி லம் மீரட் மோடிபுரத்தில் உள்ள இந்திய வேளாண் அமைப்புகளின் ஒருங்கி ணைந்த பண்ணைய ஆரா ய்ச்சி நிறுவனம், லூதியானா வின் பஞ்சாப் வேளாண் பல் கலைக்கழகத்தில் நடத்திய தேசிய அளவிலான ஒருங்கி ணைந்த பண்ணை முறை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கடந்த டிசம்பர் 2 முதல் டிசம்பர் 5 வரை நடை பெற்றது. இந்த கூட்டத்தில், பல் வேறு புதுமையான வேளாண் ஒருங்கிணைந்த பண்ணைய ஆராய்ச்சிப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், நாட்டின் பல் வேறு மாநிலங்களில் செயல் படுத்தப்படும் 17 அனைத்திந் திய ஒருங்கிணைந்த பண் ணைய மையங்கள் சார்பில் கலந்து கொண்டு தங்களது மையம் தொடர்பான ஆய்வ றிக்கைகளை சமர்ப்பித்த னர். இதில், தமிழ்நாடு வேளா ண்மைப் பல்கலைக் கழகத் தின், தஞ்சாவூர் வேளாண் மை ஆராய்ச்சி நிலையத் தை சேர்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் குழுத் தலைவர் த. பார்த்தி பன், பி.எம். சண்முகம் ஆகி யோர் கலந்து கொண்டு, கடந்த இரு ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சாகு படி முறைகள் குறித்தும், காவிரி டெல்டா மாவட்டங்க ளில் நெல்லுக்கு மாற்றாக் மாற்றுப்பயிர் திட்டத்தில் மக்காச் சோளம், உளுந்து, வெண்டை என பயிர்கள் செய்யப்படுவது தொடர் பாக பேசினர். 17 மாநிலங்களிலிருந்து கலந்து கொண்ட ஒருங்கி ணைந்த பண்ணையத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான, சிறந்த மையம் விருதை தஞ்சாவூர் ஒருங்கிணைந்த பண்ணைய மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிலையான விவ சாயத்தை மேம்படுத்து வதில் நன்செய் சூழலுக் கேற்ற ஒருங்கிணைந்த பண் ணைய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக சிறப்பு சான்றிதழும் வழங்கப் பட்டது. இதற்கான விருது மற்றும் சான்றிதழை லூதியானா வின் பஞ்சாப் வேளாண் பல் கலைக்கழக துணைவேந்தர் சத்பீர்சிங் கோசல் மற்றும் மோடிபுரத்தில் உள்ள இந்திய வேளாண் அமைப்பு களின் ஒருங்கிணைந்த பண் ணைய ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சுனில் குமார் ஆகியோர் வழங்கினர்.