தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மேலகோட்டைவாசால் பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமுஎகச மாவட்டத்தலைவர் ஆவராணி ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஆதி.உதயகுமார், சிபிஎம் நகர செயலாளர் க.வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மு.ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.