நாகப்பட்டினம், ஜன. 15 - நாகப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கனவாகிய நாகை மருத்துவக் கல்லூரி ஜனவரி 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பின ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான வீ.பி.நாகைமாலி கலந்து கொண்டார். கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப் பட்ட மருத்துவ கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காணொலிக் காட்சியின் வாயிலாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை இருந்தும் நோயாளிகளை திருவாரூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் நாகப்பட்டினம் பகுதி மக்கள் திருவாரூர் சென்று வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலை யில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகையை அடுத்த ஒரத்தூர் கிராமத்தில் தொடங்கப் ்படும் என அரசு அறிவித்தது. நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி. நாகைமாலி, அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் தலைவர் என்.கௌதமன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ். நாகை சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், நாகை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஜவகர், மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சண்முகநாதன் மற்றும் அதி காரிகள், ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.