அரியலூர், ஜூலை 20-
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நான்கு மாதக் குழந்தையை கொன்ற தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த கொடுக்கூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகள் ராஜேஸ்வரி(27). இவர் தனது நான்கு மாதக் குழந்தை யை பிளாஸ்டிக் பேரலில் உள்ள தண்ணீரில் அமுக்கிக் கொலை செய்து விட்டு, அருகிலுள்ள முந்திரி காட்டில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
குவா கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.