அரியலூர், மார்ச் 12- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 436 கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முன்னதாக அவர், மாற்றுத் திறனாளிகள் நலம் சார்பில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங் களும், நான்கு வகையான மாற்றுத்திறனு டைய சட்டப் பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட 6 பேருக்கு பாதுகாவலர் நியமனச் சான்று களையும் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.