சிவகங்கை, செப். 1 தமிழ்நாடு முதலமைச்சரா ல், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தி ற்கு வழங்கப்பட்டுள்ள நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை யினை சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில், வெள்ளி யன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில், பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து தெரிவிக்கை யில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையில் பல்வேறு மருத்துவ முகாம்களும் நடத்தப் பட்டு வருகிறது. அதனைத்தொ டர்ந்து, மனிதர்களுக்கு தேவையான உடனடி மருத்துவ சிகிச்சையை பெற்றிடும் பொருட்டு, அரசால் ஏற் படுத்தப்பட்டுள்ள 108 சேவையை போன்று, கால்நடைகளுக்கும் உரிய நேரத்தில் உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றிடும் பொருட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்திட்ட நட மாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை தமிழகத்தில் வழங்கிடும் பொருட்டு, கடந்த 20.08.2024 அன்று தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் பயன் பாட்டிற்கென மொத்தம் 200 நட மாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அதனடிப் படையில், சிவகங்கை மாவட்டத்திற் கென 6 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டு, அதனை பயன்பாட்டிற்கென இன் றைய தினம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதன் வாயிலாக, கால்நடை மருந்தகங்களுக்கு வெகு தொலை வில் உள்ள கிராமங்களில் கால்நடை களுக்கு இம்மருத்துவ ஊர்தியின் வாயிலாக உரிய நேரத்தில் கால் நடை சிகிச்சை மற்றும் கால்நடை மருத்துவ பணிகள் மேற்கொள்ளப் படுகிறது.மேலும், இச்சேவை யினை கால்நடை வளர்ப்போர் பெற்று பயன்பெறும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1962 என்ற எண்ணும் அரசால் ஏற்படுத்தப்பட்டு, பயன் பாட்டிலுள்ளது. இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியில், கால்நடை களின் நோய்க்குரிய ஆய்வுக்கான மாதிரி பொருட்கள் மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் வசதிகள், கால் நடைகளுக்கான சிகிச்சைகள், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோ தனை, மலடுநீக்க சிகிச்சைகள் மற்றும் சிறு அறுவை சிகிச்சை பணிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் கால்நடைக ளுக்கு மேற்கொள்வதற்கென வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வூர்திகள் சிவ கங்கை, மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், தேவ கோட்டை மற்றும் கண்டனூர் ஆகிய கால்நடை மருந்தகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்தந்த சுற்றுவட்ட கிராமப்புற பகுதிகளில் கால்நடை வளர்ப்போர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் பொ ருட்டு, உரிய நடவடிக்கைகள் துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை கால்நடை வளர்ப்போர், முறையாக பயன்படுத்திக் கொண்டு, தங்களது கால்நடைகளின் ஆரோக் கியத்தினை பேணிக்காத்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராம ரிப்புத்துறை) மரு.எஸ்.இராமச் சந்திரன், சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண் ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், துணை இயக்குநர் மரு.முகமதுகான், உதவி இயக்குநர் மரு.பி.இராம்குமார், கால்நடை மருந்தக உதவி மருத்து வர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் மற்றும் ஊர்தி ஓட்டு நர்கள் உட்பட துறை சார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.