புதுக்கோட்டை, ஜூலை 29 - வாசகர்களின் மிகுந்த உற்சாகத்திற் கிடையே 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத் தார். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5ஆவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்துகிறது. ரூ.1 லட்சத்திற்கு புத்தகம் வாங்கிய அமைச்சர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் புத்தகங்களை வாங்கி உரையாற்றி னார். விழாவில் வாழ்த்துரை வழங்கிய கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, “தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அறிவொளி இயக்கத்தை நடத்தியது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு எழுதப் படிக்கக் கற்று கொடுத்து மிகப்பெரிய சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. அதே அறிவியல் இயக்கமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து தற்பொழுது நடத்தும் புத்தகத் திருவிழா மூலம் அறிவுப் புரட்சிக்கு வித்திட் டுள்ளது.
எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிகப்படி யான தொகையை நூலகங்களுக்கே வழங்கி வருகிறேன்” என்றார். விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலக வதி செந்தில், நகராட்சி ஆணையர் நாகரா ஜன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் (பொ) கருணாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ் செல்வி, அறிவியல் இயக்க மாநில செயற் குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், புத்தகத் திரு விழா ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முதல் நாளே குவிந்த வாசகர்கள் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா வில் முதல் நாளே நூற்றுக்கணக்கான வாச கர்கள் குவிந்ததால் பதிப்பகத்தாரும், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாண வர்களின் விழிப்புணர்வு பேரணியை, அறந் தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ண ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப் பேரணி காந்தி பூங்கா சாலை, அண்ணா சிலை வழியாக தாலுகா அலுவலக சாலையைச் சென்றடைந்தது.