districts

img

விடுதலைப் போராட்ட வீரர் கே.பி.ஜானகி அம்மாள் நினைவு தினம்

புதுக்கோட்டை, மார்ச் 1-  சுதந்திரப் போராட்ட வீரரும், மேடை நாடகக் கலைஞரும், ஜனநாயக மாதர் சங்க  ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், விவசா யிகள் சங்கத் தலைவர்களின் ஒருவருமான தோழர் கே.பி.ஜானகி அம்மாள் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, செயலாளர் பி.சுசிலா, பொருளாளர் ஜெ. வைகைராணி, நகரச் செயலாளர் முத்துமாரி,  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பொன்னுச்சாமி, விதொச மாவட்டச் செயலா ளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஆ.குமாரவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.