மயிலாடுதுறை, ஏப்.3 - மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச் சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கை சின்னத் திற்கு வாக்கு கேட்டு பரப்பு ரையில் ஈடுபட்டார் மயிலாடுதுறை அருகே யுள்ள வில்லியநல்லூர் தாழஞ்சேரி, மேல நல்லூர், சேத்தூர், தலைஞாயிறு, பட்டவர்த்தி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங் களில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச் சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்ய நாதன் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் சுதா பேசுகையில், “இத் தேர்தலில் நான் வெற்றி பெற் றால் மகளிருக்கு வரு டத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும். நூறு நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறத்துக் கும் விரிவாக்குவோம். நூறு நாள் வேலையில் அதிகப் படியாக ஊதியத்தை ரூ.400 என கொண்டு வருவோம்” எனக் கூறி வாக்குச் சேக ரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருக்கு மாலை, சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற் றனர்.