districts

img

மாவீரன் பகத்சிங் நினைவு தினம் டெல்டா மாவட்டங்களில் வீரவணக்க நிகழ்ச்சி

புதுக்கோட்டை, மார்ச் 23 - சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன்  பகத்சிங் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக் குழு அலுவல கத்தில் சனிக்கிழமை மலர்தூவி மரி யாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு  உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதிய ழகன், மாவட்டக் குழு உறுப்பினர் டி. சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவாரூர்  சிபிஎம் திருவாரூர் மாவட்ட அலு வலகத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்வுக்கு சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் பகத்சிங் படத்திற்கு மாலை  அணிவித்து வீரவணக்கம் செலுத்தி னார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ஜி.ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர் என். இடும்பையன், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ப.ஆனந்த், தலைவர் பா.சுர்ஜித்,  சிஐடியு மாவட்டத் தலைவர் அனிபா,  பொருளாளர் இரா.மாலதி உள்ளிட்ட  பலர் வீரவணக்கம் செலுத்தினர். கரூர்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாநகரக் குழு சார்பில் அசோக் நகரில் வீரவணக்க கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநகரக் குழு உறுப்பினர் சூர்யா தலைமை வகித்தார். வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் சிவா, மாவட் டத் தலைவர் சதீஷ் ஆகியோர் பகத்சிங் உருவப் படத்திற்கு மாலை  அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்டக்  குழு அலுவலகத்தில் நடந்த வீர வணக்க நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.சுபாஷ் சந்திரபோஸ், நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.