districts

img

மாதர் சங்க புதிய கிளை தொடக்கம்

மாதர் சங்கத்தின் பொன்விழா ஆண்டையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ப.கொண்தகை கிராமம் இந்திரா குடியிருப்பில், சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. ஒன்றியத் தலைவர் எஸ்.ஜோஸ்பின்ராணி தலைமையில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டீ.லதா சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபாதேவி, காயத்ரி, வி.சுபா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.