கும்பகோணம், அக்.9 - தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சியில் பட்டிய லின மக்கள் 80-க்கும் மேற்பட்டோர் பல தலை முறையாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஒரே குடிசைக்குள் இரண்டு, மூன்று குடும்பத் தினருடன் மிகவும் சிரமப்பட்டு வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி நடத்திய போராட்டத்தின் வாயிலாக, திருவிடைமரு தூர் தனி வட்டாட்சியர் மூலம் ஒரு குறிப்பிட்ட தனியாரிடமிருந்து கிரயம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது வழக்கிற்கு சென்று, அரசு தரப்பில் வாதிடப்பட்டு வெற்றி பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட அந்த மனைகள், வீட்டு மனையாகவோ, பட்டாவாகவோ வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே வீடு இல்லாத பட்டியலின மக்க ளுக்கு உடனடியாக வீட்டு மனை மற்றும் பட்டா வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பனந் தாள் ஒன்றியம் சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முள்ளங் குடி கிளைச் செயலாளர் இளையபாரதி தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.பாரதி ஆகி யோர் கோரிக்கையை விளக்கி உரையாற்றி னர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.