மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை சீரழிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுராந்தகம், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் பி.சண்முகம், மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், பொருளாளர் வி.சசிகுமார் உள்ளிட்ட பலர் பேசினர்.