districts

img

காட்டூர் பகுதிக்குழு செயலாளராக எம்.மணிமாறன் தேர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் காட்டூர் பகுதிக் குழு 4 ஆவது மாநாடு ஞாயி றன்று காட்டூரில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள் சார்லஸ், எலிசபெத்ராணி, ஜாகீர்உசேன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த  தோழர் மரியராஜ் ஏற்றினார்.  மாநாட்டை மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். மாநாட்டில், பழைய பால்பண்ணை முதல் துவாக் குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். அரிய மங்கலம் குப்பை கிடங்கில் மீத்தேன் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மாநகரம் முழு வதும் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். திருவெ றும்பூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பகுதிக் குழு  செயலாளராக எம்.மணி மாறன் உள்பட 9 பேர் கொண்ட பகுதிக் குழு தேர்வு  செய்யப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா நிறைவுரையாற்றினார். குமார் நன்றி கூறினார்.