districts

img

“வெண்மணி தீ” நூல் வழங்கல்

டிச.25 ஆம் தேதி கீழ்வெண்மணி தியாகிகள் தினத்தன்று மறைந்த தலைவர் கோ.வீரய்யன் எழுதிய “வெண்மணி தீ” என்ற சிறு நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட செயலாளர்கள் ஜி.சுந்தரமூர்த்தி (திருவாரூர்), வீ.மாரிமுத்து (நாகை), பி.சீனிவாசன் (மயிலாடுதுறை), சின்னை பாண்டியன் (தஞ்சாவூர்) மற்றும் தோழர்களுக்கு வழங்கினார். சிங்கப்பூர் வாழ் மார்க்சிய தோழர்கள் இந்த 2500 புத்தகத்தை தங்களின் சொந்த பொறுப்பில் நன்கொடையாக வழங்கி, வெண்மணி தியாகிகளுக்கு தங்களின் வீரவணக்கத்தை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.