அறந்தாங்கி, நவ.18- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற இலக்கிய மன்றப் போட்டியினை தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு வட்டார கல்வி அலுவலர் செழியன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மண மேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டிகள், தமிழ் மற்றும் ஆங்கிலம் மன்ற போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கதை சொல்லுதல், பேச்சுப்போட்டி, கவிதை எழுதுதல் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற தமிழ் மற்றும் ஆங்கிலம் போட்டிகளில் நான்கு தலைப்பு களில் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பிடித்த மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். நிகழ்வில் மாண வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.