districts

பட்டியலின மாணவர், பாட்டியை சாதிவெறியுடன் தாக்கிய மாணவர்கள்

கரூர், ஆக.29 - உப்பிடமங்கலம் அருகே  பேருந்தில் பள்ளி மாணவர்களுக் குள் ஏற்பட்ட தகராறில் பட்டியலின மாணவரை சாதிப் பெயரை சொல்லி  திட்டிய சம்பவம் நடந்துள்ளது. மேலும், அவரது பாட்டியையும், மாணவரையும் வீடு புகுந்து தாக்கிய சாதிவெறி பிடித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீ சார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு கூறியதாவது: கரூர் மாவட்டம் உப்பிடமங்க லம் அருகே உள்ள அல்லியா கவுண்டனூரைச் சேர்ந்தவர் பட்டிய லின மாணணவர் ஜீவா (14). இவ ருக்கு அம்மா, அப்பா இல்லாததால்,  தனது பாட்டி காளியம்மாளுடன் வசித்து வருகிறார். உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் கடந்த ஆக.25 (வெள்ளிக் கிழமை) அன்று மாலை பள்ளி முடித்துவிட்டு, அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, இவருக்கும் புலியூர் செட்டிநாடு ராணி மெய்யம்மை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி யில் 12ஆம் வகுப்பு பயிலும் மாண வர் ஒருவருக்கும் பேருந்துக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சனை  குறித்து தனது பாட்டி காளியம்மாளி டம் மாணவர் ஜீவா கூறியுள்ளார்.  பேருந்தில் வந்த ஜீவாவை, சாதிப் பெயரை சொல்லி சில மாண வர்கள் தாக்கியது குறித்து, ஜீவா வின் பாட்டி பேருந்து நிறுத்தம் அருகே விபரம் கேட்டுள்ளார். பின்பு, ஆக.26 அன்று மாலை 6.30 மணியள வில், சாதிவெறி பிடித்த மாணவர்கள்  கும்பலாக மாணவர் ஜீவாவின் வீட்டிற்குச் சென்று, ஜீவா மற்றும் அவரது பாட்டி காளியம்மாளை கடு மையாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவன் மற்றும் அவரது பாட்டி இருவரும் சிகிச் சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் அளிக்கப் பட்ட புகாரின் பேரில், அல்லியாகவுண் டனூரைச் சேர்ந்த கல்லூரி மாண வர்கள் இளங்கோ (19), மணிகண்டன்  (19),  பள்ளி மாணவர்கள் விஜய் (17),  கனகராஜ் (14) ஆகிய நான்கு பேர் மீது  வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிந்து, ஆக.27 அன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சாதிவெறிப்  பிடித்த மாணவர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும்

பள்ளியில் மாணவர்கள் சாதி,  மதத்திற்கு அப்பாற்பட்டு ஒற்றுமை யாக இருந்து வந்தனர். தற்போது சமீப காலமாக தமிழகத்தில், பள்ளி களில் மாணவர்கள் மத்தியில் சாதி யப் பார்வை அதிகரித்து, இதன் மூலம் மோதல்கள் நடந்து வரு கின்றன. மாணவர்களிடையே ஏற்ப டும் இத்தகைய சாதி மோதல்கள்  மிகவும் அச்சத்தை உண்டாக்குகிறது. இதுபோன்ற தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது.  மாணவர்களிடையே நிலவும் சாதிவெறி தாக்குதல்களை தமிழக  அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. இந்நிலையை ஆரம்பத்திலேயே மாற்ற வேண் டும். மாணவர்களை நல்வழிப் படுத்த தமிழக அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.  கரூர் மாவட்ட நிர்வாகம், காவல் துறை தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் சமூக நல்லி ணக்கத்தை உருவாக்கும் வகை யான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், கரூர் மாவட்ட நிர்வாகம்  இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும்.