districts

img

தியாகி வள்ளியம்மை அரசுப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல்

மயிலாடுதுறை,மார்ச் 14- மயிலாடுதுறை மாவட் டம், பொறையார் அருகே யுள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவ தற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் விலை யில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோ பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு  நபார்டு  வங்கி நிதியுதவி ரூ.2 கோ டியே 13 லட்சம் மதிப்பீட்டில் 10 வகுப்பறை கட்டடம் கட்டு வதற்கு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் பயிலும் 30  மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார். பத்தாம் வகுப்பு பொ துத் தேர்வு எழுதும் மாண வர்களுக்கு  நிவேதா முருகன் எம்எல்ஏ தனது சொந்த செலவில் பேனாக் கள் வழங்கி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.