districts

img

கிணறு சீரமைக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியில், அரசுக்கு சொந்தமான ஊராட்சி கிணறு பழுதடைந்து உள்ளது. கிணற்றின் முகப்பு முள்வெளியால் அடைக்கப்பட்டு, கிணற்றின் வெளிப் பகுதியில் சிமெண்ட் காரை பெயர்ந்துள்ளது. மரங்கள் செடி, கொடிகள் வளர்ந்து சுத்தம் இல்லாமல் இருக்கும் இந்த கிணற்றை சுத்தம் செய்து சீரமைக்கப்படுமா?