districts

img

பதக்கம் வென்ற திருவாரூர் மாணவர்களுக்கு பாராட்டு

திருவாரூர், ஆக.29 - கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் உள்ள சம்பிரம் இன்ஸ்ட்டியூடில் ஆக.26, 27 தேதிகளில் 2 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டி-2023 நடைபெற்றது. இப்போட்டியில் திருவாரூர் டி-டைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் கராத்தே, யோகா மற்றும் சிலம்பம் மாணவர்கள் 8 பேர், பயிற்சியாளர் குணசேகரன் தலைமையில் கலந்து கொண்டனர். இவர்கள் யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் 6 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப் பதக்கம் வென்றனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டி.வி.சதானந்த கவுடா பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். திருவாரூருக்கு வந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் அழைத்துப் பாராட்டினார்.