தஞ்சாவூர், ஜன.27- தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக அங்கு சென்று இரண்டு நாட்களாக தங்கியிருந்து 12 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்கிய திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு தன்னார்வலர்களுக்கு “சிறந்த சேவைக்கான” பாராட்டுச் சான்றிதழை குடியரசு தின விழா வில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கி பாராட்டினார். கடந்த டிசம்பர் 17 அன்று தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் உடைப்பெடுத்து தாழ்வான பகுதிகளுக் குள் புகுந்தது. இந்த மழை வெள்ளத்தால் நான்கு மாவட்டங்களில் வசிக்கும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடிநீர், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசி யப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டதால், வெளி மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட் கள் அந்தந்த மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகத் தின் சார்பிலும், தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் வழங்கப்பட்டன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருக் காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மெஸ் நடத்தி வரும் டி.சரவணக்குமார் (53), பழக்கடை நடத்தி வரும் ஏ.ஜெய்னுலாபுதீன்(58) ஆகிய இருவரும் குடும் பத்தினருடன் தூத்துக்குடி சென்று அங்கு உள்ள பள்ளியில் இரண்டு நாட்களாக தங்கி உணவு சமைத்து, 12 ஆயிரம் பேருக்கு வழங்கினர். இந்த சமூக சேவையை பாராட்டும் விதமாக தஞ்சாவூரில் (ஜன.26) நடந்த குடியரசு தின விழா வில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இருவருக் கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.