districts

img

மாநில அளவிலான கராத்தே போட்டி பதக்கம் வென்ற துப்புரவுத் தொழிலாளியின் மகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறை, அக்.25 - மாநில அளவிலான கராத்தே போட்டியில்  வெண்கலப் பதக்கம் வென்ற துப்புரவுத் தொழிலாளியின் மகளுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பா டியை ஒட்டியுள்ள பொறையார், காட்டுநாயக் கன் தெருவைச் சேர்ந்தவர் துப்புரவு தொழிலாளியான தியாகராஜன் - நதியா தம்பதி. இவர்களது மகளான வர்ஷா அக்.21  அன்று சென்னையில் நடைபெற்ற 40 ஆவது  மாநில கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.  மயிலாடுதுறை மாவட்ட கராத்தே அணி சார்பில் பங்கேற்ற வர்ஷா, மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில், சர்வதேச கராத்தே வீரர் சென்சாய் கராத்தே  கதிரவனிடம்  பயிற்சி பெற்று வருகிறார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாநில கராத்தே போட்டியில் பதக்கங்களை வெல் லும், மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரே கராத்தே பள்ளி என்ற பெருமையை ‘ஜென்  மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி’ பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி மற்றும் மயிலாடு துறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத் தின் செயலாளரும் பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவனை, பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிவேதா முருகன், செம்பை ஒன்றியக் குழு தலைவர்  நந்தினி ஸ்ரீதர், தரங்கை பேரூராட்சித் தலை வர் சுகுணசங்கரி குமரவேல், வார்டு கவுன்சி லர் சரஸ்வதி வெற்றிவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.