districts

img

ராணுவ வீரர்களுக்கு திருக்குறள், ராக்கிகள் அனுப்பிய கரூர் பரணி பார்க் சாரணர்கள்

இந்திய ராணுவ வீரர்களுக்கு 2 லட்சம் திருக் குறள், ராக்கிகள் உட்பட 2 லட்சத்து 50 ஆயிரம் ராக்கிகள் எட்டாவது ஆண்டாக கரூர் பரணிபார்க் சாரணர் மாவட்டம் சார்பாக அனுப்பி வைத்தனர். பரணி பார்க் சாரணர் மாவட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் இந்திய முப்படை வீரர்களுக்கு அன்பும், நன்றியும் தெரிவிக்கும் விதமாக இந்த ஆண்டு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ராக்கி சகோத ரத்துவ கயிறுகளை புதுதில்லி ராணுவ தலைமைய கத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி கரூர் பரணி பார்க் பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. கடந்த   2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிர மணியன் தலைமையில் பரணி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து லட்சக்கணக்கான ராக்கி கயிறுகள் தயாரித்து ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.  அந்த வகையில் இந்த ஆண்டும் ஒவ்வொரு ராக்கியிலும், நாட்டின் உச்சபட்ச ராணுவ விருதான ‘பரம் வீர் சக்ரா விருது’ பெற்ற 21 வீரர்களைக் கௌரவிக்கும் வகையில்  அவர்கள் புகைப்படமும், தமிழ், ஆங்கிலம், உருது, சமஸ்கிரு தம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, அசாமி, குஜாராத்தி, பெங்காலி, சந்தாளி, கொங்கணி, ஒடியா, நேபாளி, சிந்தி ஆகிய 18 இந்திய மொழிகளில்  திருக்குறளும் பொறித்த ராக்கி கயிறுகள் 2 லட்சம்,  பிற ராக்கி கயிறுகள் 50 ஆயிரம் என  மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ராக்கி கயிறுகள் இந்திய இராணுவ  வீரர்களுக்கு அனுப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கு கரூர் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவ லர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன்,  கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்க தலைவர் முருகேசன் ஆகியோர் பேசினர். பள்ளி முதல்வர் கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ராக்கி கயிறுகளை புது தில்லிக்கு  அனுப்பி வைத்தனர். இது குறித்து ராணுவ வீரர்களுக்கான ராக்கிக ளை ஒருங்கிணைக்கும் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் கூறு கையில், “நாம் அனைவரும் நமது நாட்டின் முப் படைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கி றோம். நமது முப்படை வீரர்கள் இல்லாமல் நாம் ஒரு போதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக் கொள்கிறது. கடந்த 2017 முதல், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ  வீரர்களுக்கு ராக்கி களை அனுப்பி வருகிறோம். 2017 இல் 15000 ராக்கிகள், 2018 இல் 16000 ராக்கிகள், 2019 இல் ஒரு லட்சம் ராக்கிகள் மற்றும் 2020 மற்றும் 2021 இல் ஒவ்வொரு ஆண்டும் 25000 ராக்கிகள் அனுப்பப்பட்டன (கோவிட் தொற்று நோய் இருந்த போதிலும் அனுப்பப்பட்டன). கடந்த  2022 ஆம் ஆண்டு 1,50,000 ராக்கிகள் அனுப்பப்பட்டன. அதற்காக மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு எங் களை நேரில் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாக மூட்டுவதாக  அமைந்தது. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு இந்திய முப்படைகளுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ராக்கிகள் அனுப்பப்பட்டன. இதை தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய, முப்ப டைகளுக்கு நமது மகிழ்ச்சி மற்றும் நன்றியின் அடையாளமாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர் கள் இணைந்து  2 லட்சத்து 50 ஆயிரம்  ராக்கிகளை தயார் செய்து அனுப்பியுள்ளோம்” என்று கூறினார். பள்ளி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.