தஞ்சாவூர், ஆக.5-
சவுதி அரேபியா நாட்டின், சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய, பெண் செவி லியர்களுக்கான வேலை வாய்ப்பு அறி விக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சி.என். மகேஸ்வரன் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், “சவுதி அரேபிய அமைச்சகத்தில் அரசு மருத்துவமனை களில் பெண் செவிலியர்களாக பணிபுரி வதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன், பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலி யர்கள் தேவைப்படுகின்றனர்.
மேலும் data flow மற்றும் hrd சான்றி தழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் செவிலியர்களுக்கு உணவுப் படி, இருப்பிடம், விமான பயணச் சீட்டு ஆகியவை அந்த நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணியி டங்கள் குறித்து நிறுவனத்தின் வலைதள மான www.omcmanpower.com இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங் களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறு வன தொலைபேசி எண்களின் (95662 39685, 6379179200, 044-22505886, 22502267) மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலேயே பதிவு செய்வதற்கு ஏதுவாக தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம், சேலம், திருவள்ளூர், சென்னை, ஈரோடு, இராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 9 அன்று காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையத்தில் இதற்கான பதிவு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமுக்கு வர முடியாதவர்கள் தங்களு டைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவ னத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது முகவர்களோ கிடையாது. விண் ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிட மிருந்து சேவை கட்டணமாக ரூ.35, 400 மட்டும் வசூலிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.