districts

img

திருவள்ளுவர் வணிக வளாக கட்டிடத்தை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

தஞ்சாவூர், பிப்.25-  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், சென்னை தலைமைச் செயலகத் தில் இருந்து, தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ரூ.53 கோடி  மதிப்பீட்டில் கட்டப்பட்ட, திருவள்ளு வர் வணிக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக சனிக் கிழமை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் முன்னிலையில், தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே. ஜி.நீலமேகம் ஆகியோர் குத்துவிளக் கேற்றினர். தஞ்சாவூர் மாநகராட்சி சீர்மிகு நகர  திட்டப் பணிகளின்கீழ் திருவள்ளுவர் திரையரங்கத்தை, வணிக வளாகமாக மாற்றும் பணி ரூ.53 கோடி மதிப்பீட் டில், 98,790 சதுர அடியில் அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் கொண்டதாக உள்ளது.  இதில் 3 பெரிய கடைகள் உட்பட மொத்தம் 47 கடைகள் உள்ளன. வாகன நிறுத்துமிடத்தில் இருசக்கர  வாகனங்கள் 30 எண்ணிக்கையிலும், நான்கு சக்கர வாகனங்கள் 130 எண்ணிக் கையிலும், மின்தூக்கி, நகரும் படிக் கட்டுகள் மற்றும் கழிவறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக னங்களை நிறுத்துவதற்கு, நுழைவு மற்றும் வெளியே செல்வதற்கு தனித் தனியாக வழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. திருவள்ளுவர் திரையரங்கத்தை வணிக வளாகமாக மாற்றும் பணியில் கூடுதலாக, பல அடுக்கு கார் நிறுத்தும் வசதியில் 56 கார்கள் நிறுத்தும் வசதி,  வணிக வளாகம் முழுவதும் குளிர்சாதன  வசதி, அனைத்து தளங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வசதிகள், பல அடுக்கு கார் நிறுத்தும்  பகுதியில் மின்சார வசதி, மின்னல் தடுப்பு போன்ற வசதிகளும் அமைக்கப் பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், தஞ்சை மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை  மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட  ஊராட்சித் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.