அரியலூர்/கரூர், ஜன.19 - குடியரசுத் தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் ஜன.26 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரி விக்கையில், “அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 26.1.2024 அன்று குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடை பெறவுள்ளது. கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இருந்து வரப் பெற்ற கட்டப் பொருள்கள் மற்றும் இதர கூட்டப் பொருள்கள் விவாதிக் கப்படும். மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவ லர்கள், அந்தந்த பகுதி களில் உள்ள மக்கள் பிரதி நிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பி னர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்” என்றார். கரூர் கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சி களிலும் ஜன.26 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி விக்கையில், “கரூர் மாவட் டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் ஜன.26 அன்று, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட் சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நட வடிக்கைகள் குறித்து விவா தித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே கிராம ஊராட்சி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என் றார்.