districts

img

மணிப்பூரில் கும்பல் பாலியல் வல்லுறவு சம்பவங்களை வேடிக்கை பார்ப்பதா பாஜக அரசுகளை கண்டித்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 24 -

       மணிப்பூர் மாநிலத்தில் தொட ரும் கலவரத்தை கண்டித்தும், பெண்களை நிர்வாணமாக்கி பாலி யல் வல்லுறவு செய்த குற்றவாளி கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்காத ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசு பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கட்கிழமை  டெல்டா மாவட்டங்களின் பல்வேறு  இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவெறும்பூர் ஒன்றியக் குழு மற்றும் பெல் இடைக்கமிட்டி சார் பில் திருவெறும்பூர் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா  செயலாளர் மல்லிகா தலைமை  வகித்தார். மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட குழு உறுப்பினர்கள் அரு ணன், தெய்வநீதி, குமார், முரு கேசன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.

     தாலுகா குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், மாணவர்,  வாலிபர், மாதர், மாற்றுத்திறனாளி கள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தாலுகா குழு உறுப்பி னர் சங்கர் நன்றி கூறினார்.

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்கு பகுதிக்குழு சார்பில்  தென்னூரில் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அஹமது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ராமச்சந்தி ரன், மாவட்ட குழு உறுப்பினர் அன்  வர் உசேன், மூத்த தோழர்கள் சம்பத், நடராஜன் ஆகியோர் பேசி னர். பகுதிக்குழு உறுப்பினர் வள்ளி நன்றி கூறினார்.

தஞ்சாவூர்

     தஞ்சாவூர் பழைய பேருந்து  நிலையம் அருகே, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் கே.அபிமன்னன், மாநகரச் செயலாளர் எம்.வடி வேலன் தலைமையில் ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், ஆர்.கலைச் செல்வி கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு, மாநகரக் குழு, ஒன்  றியக் குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.

 மாணவர்கள் போராட்டம்

    தஞ்சை மன்னர் சரபோஜி அரசு  கல்லூரியில் திங்களன்று கிளை  நிர்வாகி ஜெகன்ராஜ் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கிளை நிர்  வாகிகள் உட்பட 500-க்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

     தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் அணி ஆலோசனைக் குழு  உறுப்பினர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட 300-க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

     திருவாரூர் மாவட்டம் பழைய  பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் கண்டன உரை யாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கோமதி, தீண்டாமை ஒழிப்பு முன்  னணி மாவட்டச் செயலாளர் கே. தமிழ்மணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குடவாசல்

    குடவாசல் வி.பி.சிந்தன்  பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, குடவாசல் நகரக்  குழு உறுப்பினர் டி.ஜி.சேகர், ஒன்றி யக் குழு உறுப்பினர் எம்.கோபி நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்னிலம்

     நன்னிலம் ஒன்றியம், கொல்லு மாங்குடி கடைவீதியில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரை யாற்றினார். சிபிஎம் மாவட்ட கவுன்  சிலர் ஐ.முகமது உதுமான் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

திருத்துறைப்பூண்டி

     திருவாரூர் மாவட்டம் திருத்  துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார்.  

    திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், வடக்கு ஒன்றியச் செயலாளர் விடி.கதிரேசன், நக ரச் செயலாளர் கே.கோபு, கோட்டூர்  ஒன்றியச் செயலாளர் எல்.சண் முகம் முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, நக ரச் செயலாளர் சி.செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு, மாவட்  டக் குழு உறுப்பினர்கள், நக மன்ற  துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.