districts

img

கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ, சதுரங்க போட்டிகள்

மயிலாடுதுறை, அக்.13 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் அண்ணாமலைப் பல்க லைக்கழக கல்லூரி களுக்கு இடையேயான டேக்வாண்டோ மற்றும் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.  அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்லூ ரிகளுக்கு இடையே யான டேக்வாண்டோ மற்றும் சதுரங்க போட்டி களை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். டேக்வாண்டோ போட்டியில் 15 கல்லூரிகளும், சதுரங்கப் போட்டியில் 25 கல்லூரிகளும் பங்கேற்றன. டேக்வாண்டோ போட்டி ஆண்கள் பிரிவில் முதலிடத்தை கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, 2 ஆம்  இடத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்க லைக்கழகம், 3 ஆம் இடத்தை பொறையார் த.பே.மா.லு கல்லூரி மற்றும் திட்டை அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றது.  சதுரங்கப் போட்டியில், ஆண்கள் பிரிவில்  முதலிடத்தை கடலூர் பெரியார் கலைக் கல்லூரியும் 2 ஆம் இடத்தை த.பே.மா.லு கல்லூரியும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், 3 ஆம் இடத்தை முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பிடித்தன. டேக்வாண்டோ போட்டி பெண்கள் பிரிவில் முதலிடத்தை கடலூர் இமாக்கு லேட் கல்லூரி, 2 ஆம் இடத்தை மயிலாடு துறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரி (பெண்கள்), 3 ஆம் இடத்தை த.பே.மா.லு கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் பெற்றன. சதுரங்கப் போட்டி பெண்கள் பிரிவில், முதலிடத்தை கடலூர் பெரியார் கலைக் கல்லூரியும், 2 ஆம் இடத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும்  மூன்றாம் இடத்தை கடலூர் கந்தசாமி நாயுடு  கல்லூரி, முட்லூர் அரசு கலை கல்லூரியும் பிடித்தன. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு, கல்லூரி துணை முதல்வர் ஹெனா கிளாடிஸ் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை இயக்குநர் முனை வர் ஆர்.வெங்கடாசலபதி மற்றும் ஏபி ஜோன்  ஒருங்கிணைப்பாளர்கள் பரிசுகளை வழங்கினர்.