districts

கோட்டான்களுக்கு குடில் அமைக்க அறிவுறுத்தல்

பாபநாசம், டிச.5 - அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா விடுத்துள்ள செய்தி குறிப்பில், எலி கட்டுப்பாட்டில் கோட்டான்களின் பங்கு உள்ளது. கோட்டான்கள் இரவு  நேரத்தில் வயல்வெளிகளில் சுற்றித்திரிந்து எலிகளை வேட்டையாடும் பறவை ஆகும். இவை பகல் நேரத்தில் தென்படாது. பாழடைந்த கோவில்கள், பெரிய மரங்கள் இவற்றில் மறைந்து வசிக்கும். பொந்துகளில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து வாழும். இவை வாழும் இடத்தில் சுண்ணாம்பு தெளித்தது போல  இவற்றின் எச்சங்கள் காணப்படும். ஒரு இரவில் ஒரு கோட்டான் குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு எலிகளை முழுமையாக விழுங்கி விடும். பின்னர் அவற்றின் எலும்புக்  கூடுகளை வெளியே கக்கி விடும். இவ்வாறு எலிகளின் முழு  எலும்புக்கூடுகள் எச்சமாக காணப்பட்டால் அவ்விடத்தில் கோட்டான்கள் வசிக்கின்றன என நாம் அறிந்து கொள்ள லாம்.  நெற்பயிரின் வயல்வெளிகளில் கோட்டான்கள் வந்து  தங்குவதற்கு வசதியாக கோட்டான் குடில்கள் அமைத்தால் வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் எலி வெட்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.